பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 45,46வது வட்டத்தை சார்ந்த சுந்தரம் பவர் லைன் மற்றும் தேசிகானந்தபுரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று வியாசர்பாடியில் அமைந்துள்ள ராம்ஸ் மஹாலில் 158 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினோம்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், பகுதி செயலாளர்கள் க ஜெயராமன், அ. முருகன், மாமன்ற உறுப்பினர்கள் சி. ஆனந்தி, ஷர்மிளா காந்தி, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். ஆர் கமலக்கண்ணன் வட்டச் செயலாளர்கள் கி தினகரன், வி. முருகன்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

