வியாசர்பாடி டி டி பிளாக்கில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு ஆணை மற்றும் விற்பனை பத்திரங்கள் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வியாசர்பாடி டி.டி.பிளாக்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 468 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 10.06.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இட்ட பகுதி பயனாளிகளுக்கு (291) ஒதுக்கீடு ஆணை மற்றும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

